போக்குவரத்து போலீஸாரின் உடையில் கேமரா


போக்குவரத்து போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. வாகனஓட்டிகளிடம் போலீஸார் லஞ்சம் வாங்குவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னையில் 201 போக்குவரத்து போலீஸாரின் உடையில் மைக்ரோபோனுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இனிமேல் போக்குவரத்து போலீஸார், வாகனஓட்டிகளின் செயல்பாடுகள், உரையாடல்கள் கேமராவில் பதிவாகும்.